இலங்கை

ஹட்டனில் சுற்றுலா விடுதி ஒன்றின் அறையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு

ஹட்டன் – கொட்டகலை, கொமர்ஷல் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் அறையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து கொட்டகலைக்கு சுற்றுலா சென்ற 60 வயதுடைய ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமது நண்பருடன் குறித்த சுற்றுலா விடுதிக்கு சென்ற அவர், நண்பருடன் நேற்று (5) மது அருந்திவிட்டு விடுதியில் கிழே விழுந்து கிடந்துள்ளார்.பின்னர், கீழே விழுந்த நபர் மீண்டும் அறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

எனினும், குறித்த நபர் இன்று விடுதியை விட்டு வெளியில் வராமையினால், விடுதி ஊழியர் ஒருவர் இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து பொலிஸார் அந்த விடுதிக்கு வந்து சோதனையிட்ட போது, குறித்த நபர் அறைக்குள் உயிரிழந்தமையை உறுதி செய்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!