இந்தியா

இந்தியாவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்து : 14 பேர் பலி!

மேற்கு இந்தியாவில் படகு விபத்தில் 12 பள்ளி மாணவர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குஜராத் மாநிலம் வடடோராவில் உள்ள ஹார்னி ஏரிக்கு ஆய்வுப் பயணமாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு  விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 12 குழந்தைகளும் இரண்டு ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதுடன், விபத்தின் போது படகில் சுமார் 31 பேர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.   மேலும் 07 பேர் உயிர் தப்பியுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படகில் பயணித்தவர்கள் உயிர்காக்கும் அங்கி அணிந்திருக்கவில்லை எனவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!