கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு – இளைஞன் படுகாயம்
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் குண்டு வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
கொடிகாமம் பகுதியை சேர்ந்த வில்வராசா தனுஷன் (வயது 19) எனும் இளைஞனே படுகாயமடைந்துள்ளனர்
கொடிகாமம் பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த இளைஞன் வேலை செய்து கொண்டிருந்த வேளை நிலத்தினுள் புதையுண்டிருந்த வெடி பொருள் வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)





