இலங்கை செய்தி

இலங்கைக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள அவுஸ்திரேலியா

இலங்கைக்கு விஜயம் செய்யும் அவுஸ்திரேலியர்களுக்கான பயண அறிவுறுத்தல்களின் தொகுப்பை மீளாய்வு செய்ய அவுஸ்திரேலியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த ஆலோசனைன இன்று முதல் இது அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கைக்கு விஜயம் செய்யும்போது மேலும் எதிர்ப்புகள், போராட்டங்கள் போன்றவறவை தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறான பகுதிகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் தமது பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சில உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கிரெடிட் கார்டு மோசடி, அதிக கட்டணம் வசூலித்தல், போலி பொருட்களை விற்பனை செய்தல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொள்ளை போன்ற குற்றங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!