ஐரோப்பா

காசா மருத்துவமனை மீது தாக்குதல் ; இஸ்ரேலுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையம் கண்டனம்

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

12 வது நாளாக தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக, இரு நாடுகளிலும் பலி எண்ணிக்கை 4,200ஐ கடந்துள்ளது. போருக்கு நடுவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிறுவர்கள், நோயாளிகள் என 500 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட புகைப்படங்களை காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதனையடுத்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டித்தும் அரபு நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

Saudi Arabia leads condemnation of Israeli airstrike on Gaza hospital that  killed hundreds | Arab News

இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையர் வோல்கர் துர்க், ” மருத்துவமனைகள் புனிதமானவை, அவை எந்த சூழல்களிலும் பாதுகாக்கப்பட வேண்டியவை. இந்த படுகொலையின் முழு அளவு எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. ஆனால் தாக்குதல்களும், படுகொலைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது.இந்த பயங்கர சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வர செல்வாக்குள்ள அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.குடிமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும், மேலும் மனிதாபிமான உதவிகள் உரியவர்களை சென்றடைய அனுமதிக்க வேண்டும்”என்றார்.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்