இலங்கை

மதுவிற்காக நிலைய அதிகாரிகள் மீது தாக்குதல்- மூவர் கைது

பொலவத்த வென்னப்புவ புகையிரத நிலையத்திற்குள் மது அருந்த அனுமதிக்காத புகையிரத நிலைய அதிகாரி மற்றும் ஊழியர்களைத் தாக்கிய மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புகையிரத நிலையத்திற்குள் மது அருந்திய அந்த நபர்களை, அதிகாரிகள் புகையிரத நிலையத்திலிருந்து வெளியேறுமாறு தெரிவித்துள்ளனர். அப்போது குறித்த குழுவிலிருந்த நபர் ஒருவர் கத்தியைக் காட்டி அவர்களை மிரட்டியதோடு தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த ரயில்வே ஊழியர்களும் அதிகாரியும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலவத்த மற்றும் மிரிசங்கொட்டுவ பிரதேசங்களைச் சேர்ந்த 34 தொடக்கம் 45 வயதிற்கிடைப்பட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சந்தேக நபர்கள் இன்று மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!