செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்ற இங்கிலாந்து

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், மெல்போர்ன்(Melbourne) மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் இப்போட்டி பாக்சிங் டே(Boxing Day) டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 45.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 152 ஓட்டங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 29.5 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 110 ஓட்டங்களை பெற்றது.

50 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஆஸ்திரேலிய அணி 34.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 132 ஓட்டங்கள் குவித்து 175 இலக்கை நிர்ணயித்தது.

இந்நிலையில், 175 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 32.2 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் 15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!