உலகம்

மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் செயற்கை நுண்ணறிவு

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் புதிய முயற்சியாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்படுகிறது.

இந்த நவீன தொழில்நுட்பம், அறிகுறிகள் தென்படும் முன்னரே புற்றுநோயைக் கண்டுபிடிக்க உதவுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மார்பகத்தில் புற்றுநோய் உருவாக்கும் ஆரம்ப கட்ட கட்டிகள், பரிசோதனையில் வெள்ளைப் புள்ளிகளாக மட்டுமே தோன்றுவதால், அவற்றைக் கண்ணோட்டத்தில் கண்டறிவது கடினமாகும்.

ஆனால் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பரிசோதனைகள், இக்கட்டிகளை துல்லியமாகக் கணிப்பதுடன், சிகிச்சையை விரைவாகத் தொடங்கவும் வழிவகுக்கும்.

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சுமார் 95 சதவீத துல்லியத்துடன் செயல்படுகிறது. இதன் மூலம் புற்றுநோயின் பரவலைக் குறைத்து, உயிர் காக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போது, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் மார்பகப் புற்றுநோயாளிகள் 10 பேரில் ஒருவருக்கு மட்டுமே நான்காம் கட்டத்தில் நோய் கண்டறியப்படுகிறது.

இது சிகிச்சை பலனளிக்க முடியாத கட்டமாகவும் இருக்கக்கூடும். எனவே, ஆரம்ப கட்டத்திலேயே நோயைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு, மருத்துவத் துறையில் மிக முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!