இலங்கை செய்தி

அம்பாறை கனகர் கிராம நில பிரச்சனை – மிரட்டல் விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன்

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகர் கிராம மக்களின் நிலங்களில் வேறு குடியேற்றங்களை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமது காணிகளில் இருந்து வெளியேறுமாறு கூறுவதுடன் அதற்கு எதிராக கதைக்கும்போது உங்களை கைதுசெய்வேன் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் மிரட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவை தெரிவிக்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு தாங்கள் அப்பகுதியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது அப்பகுதியில் உள்ள தமது காணிகளை தருவதற்கு பொத்துவில் பிரதேச செயலாளர் மறுப்பு தெரிவிப்பதுடன் அப்பகுதியில் தமிழர்கள் முழுமையாக வாழ்ந்த நிலையிலும் தற்போது முஸ்லிம்களையும் இணைத்து குடியேற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதன்போது தெரிவித்தனர்.
கனகர் கிராம மக்களை வைத்து தமது அரசியல் சுயலாபங்களுக்காக செயற்படுவோர் தொடர்பில் எதிர்காலத்தில் மக்கள் கடுமையான நடவடிக்கையெடுப்பார்கள் என ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபா இதன்போது தெரிவித்தார்.

(Visited 16 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை