வட அமெரிக்கா

அமெரிக்கா-கணவருக்கு கத்திக்குத்து…காரில் 3 குழந்தைகளுடன் ஏரிக்குள் பாய்ந்த மனைவி!

தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் காரை ஏரி ஒன்றினுள் தாய் பாய்ச்சிய சம்பவம் அமெரிக்காவின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கர்ரோல்டன் பகுதியில் கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் சென்று கொண்டு இருந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று திடீரென ஏரிக்குள் பாய்ந்தது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

அப்போது, குடும்ப தகராறு காரணமாக மனைவி கணவரை கத்தியால் குத்திவிட்டு தன்னுடைய 8,9, மற்றும் 12 வயதுடைய 3 குழந்தைகளுடன் காரை ஏரிக்குள் பாய்ச்சியது தெரியவந்துள்ளது.

தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைவாக சம்பவ இடத்திற்கு விரைந்ததால் அதிர்ஷ்டவசமாக அனைவரையும் உடனடியாக மீட்க முடிந்தது.இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகளில் ஒரு குழந்தை தீவிரமான சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், மற்ற 2 குழந்தைகளும் குணமடைந்து நல்ல உடல் நிலையுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த கணவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மனைவியை பொலிஸார் கைது செய்து, வன்முறைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்