இலங்கை செய்தி

வாகன இறக்குமதிக்கு எல்லா நடவடிக்கைகளும் தயார்

அனைத்து வாகனங்களையும் விரைவில் இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

அதன் காரணமாகவே வாகன இறக்குமதிக்கு தேவையான நடவடிக்கைகளை தமது தரப்பு தற்போது முன்னெடுத்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், வாகனங்களை இறக்குமதி செய்தாலும், வாகனங்களை வாங்கும் திறன் இல்லாததால், வாகனங்களின் தேவை குறையும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் தற்போது இந்த நாட்டில் அதிக விலைக்கு விற்கப்படும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் அதிக விலை, வாகன இறக்குமதியின் மூலம் கணிசமாக குறையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வாகனங்களை மீள் இறக்குமதி செய்வதற்கான தொடர் கொள்கைகளை நிதியமைச்சு தற்போது தயாரித்து வருவதாகவும், அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்து விரைவில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கவும் அரசாங்கம் தயாராக உள்ளது.

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவும் அண்மையில் இதனைத் தெரிவித்தார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!