ஆசியா

சிங்கப்பூர் விமான நிலையத்தில் பயன்பாட்டிற்கு வரும் AI செயற்கை நுண்ணறிவு முறை!

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய, பயணிகளின் பாதுகாப்பு சோதனை நேரத்தை குறைக்க முடியுமா என்பதை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதன் ஒருபகுதியாக, AI மற்றும் X-ray படங்களை தரும் இயந்திரத்தையும் பயன்படுத்தி கைப்பெட்டிகளை செக்-இன் சோதனை செய்யும் முறையை சாங்கி விமான நிலையம் சோதனை செய்து வருகிறது.

இதனால் விமான நிலைய அதிகாரிகளின் செயலாக்க நேரம் குறையும் என்றும், மனித பிழையின் சாத்தியக்கூறுகளையும் அது குறைக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இதுவரை, சிகரெட் லைட்டர்கள் அல்லது கூர்மையான பொருள்கள் போன்ற சில தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கண்டறிய AI அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.

மேம்பட்ட சோதனை முறை வந்தால், செக்-இன் நேரங்களை பாதியாக குறைக்கலாம் என்று விமான நிலையம் நம்புவதாக தனது அறிக்கையில் கூறுகிறது.

இந்த சோதனை முறை வெற்றி அடைந்துள்ளதாகவும், இந்த செயற்கை நுண்ணறிவு முறை மனித செயல்பாடுகளை விட நன்றாக செயல்படுவதாகவும் அது கூறியுள்ளது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!