இலங்கையின் பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று (28) வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இவ்வாறான அதிக வெப்பமான காலநிலை காணப்படும்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு பகுதிகளில் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் ‘கவனம்’ என்று அழைக்கும் மட்டத்தில் இருக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)