இலங்கை வரலாற்றில் பதிவான சாதனை – அந்திய செலாவணியில் ஏற்பட்ட அதிகரிப்பு

வெளிநாட்டில் பணி புரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளத.
வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட அதியுள்ள அளவான இரண்டாவது தொகையான அந்நிய செலவாணி கடந்த மாதத்தில் பெறப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதற்கமைய இந்தப் பணப் பரிமாற்றத்தின் பெறுமதி 693.3 மில்லியன் அமெரிக்க டொலராகும்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை பெற்ற மொத்த வெளிநாட்டுப் பணம் அனுப்புதல்கள் 1,814.4 மில்லியனாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் பெறப்பட்ட 1,536.1 மில்லியன் டொலர் மதிப்போடு ஒப்பிடும்போது 18.1% அதிகமாகும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)