பேரா ஏரியை பராமரித்து செயற்படுத்த தயாராகும் தனியார் நிறுவனம்

கொழும்பின் மையத்தில் அமைந்துள்ள பேரா ஏரியை பராமரித்து செயற்படுத்த தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பேரா ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அகற்றி சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்க சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், பேரா ஏரிக்கு கழிவுநீர் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கு பதிலாக மாற்று முறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
உயர் தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அறிவியல் முறைகளை பயன்படுத்தி ஏரியை சுத்தம் செய்யும் பணியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்.
(Visited 12 times, 1 visits today)