ஆசியா

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் 4.1 ரிக்டரில் உணரப்பட்ட நிலநடுக்கம்

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. சீனாவின் சின்ஜியாங் பகுதியில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

170 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது.

இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே ஆப்கானிஸ்தான், நேபாளம், பாகிஸ்தான், வட இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று தினங்களாக, அதாவது ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமை ஆகிய மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் கடுமையான அதிர்ச்சியடைந்தனர்.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!