பிரான்ஸில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுமி உள்ளிட்ட கும்பல்
![](https://iftamil.com/wp-content/uploads/2023/10/c262283e-17bd-487d-95b8-164322e03cd8-jpg.webp)
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சிறுவர்கள் கொண்ட கும்பலால் பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பாரிஸில் வசிக்கும் முதியவர் ஒருவரது வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தை அடுத்து, சிறுவர்கள் உள்ளிட்ட ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் 81 வயதுடைய பெண் ஒருவரது வீட்டிலேயே கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த வீட்டுக்குள் திங்கட்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் நுழைந்த கொள்ளையர்கள் சிலர், அங்கு தனியாக வசித்த குறித்த மூதாட்டியை கட்டி வைத்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்தினை வந்தடையும் முன்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். பொலிஸார் ஐவர் கொண்ட குழுவை குறித்த அடுக்குமாடி குடியிருப்பு அருகே கைது செய்தனர். 18, 19, 22 வயதுடைய மூவரையும் 16 வயதுடைய ஒரு சிறுமி ஒருவரையும் 15 வயதுடைய சிறுவன் ஒருவரையும் கைது செய்தனர்.