செய்தி

கண்டியிலிருந்து அகதிகளாக தமிழகம் சென்று தஞ்சமடைந்த குடும்பம்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

கண்டியைச் சேர்ந்த 43 வயதுடைய எம்.மொஹமட் கியாஸ், அவரது மனைவியான 34 வயதுடைய எம். பாத்திமா ஃபர்ஹானா ஆகியோரும், 12 மற்றும் 4 வயதுடைய அவர்களது மூன்று பிள்ளைகளுமே தமிழ் நாட்டில் பொருளாதார தஞ்சம் கோரியுள்ளனர்.

படகு மூலமாக இலங்கையிலிருந்து பயணித்த இவர்கள், இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடிக்கு இடையேயான கரையில் இறக்கிவிடப்பட்டுள்ளதாகத் தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோசமான பொருளாதார நிலைமை காரணமாக தாங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக, குறித்த குடும்பத்தினர் பொலிஸாரி்ம் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இதனையடுத்து, அவர்களை மண்டபம் மறுவாழ்வு மையத்தில் தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 59 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!