இந்தியா செய்தி

மத்திய பிரதேசத்தில் 4 ஆண்டுகளாக மகளை பலாத்காரம் செய்த 40 வயது நபர்

மத்திய பிரதேச மாநிலம் சத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது நபர், கடந்த 4 ஆண்டுகளாக தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இது தொடர்பாக அந்த நபரின் மனைவியும், 21 வயது மகளும் லவ்குஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே தன் மீது புகார் அளிக்கப்பட்டதை அறிந்து சம்பந்தப்பட்ட நபர் தலைமைறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்த நபர் தனது மகளை மைனர் சிறுமியாக இருந்த போதே பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் என்பதால், அவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

(Visited 44 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி