உலகம்

பிரேசிலில் கடும் வெள்ளம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மண்ணுக்குள் புதைந்த சோகம்

பிரேசில் நாட்டின் Rio de Janeiro (state) மாகாணத்தில் கடுமையான மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 21ஆம் தேதி முதல் மாகாணத்தின் தெற்கு பகுதியில் கனமழை பெய்கிறது.

அதன்படி 42.8 மில்லி மீட்டர் அளவுக்கு கன மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Rio de Janeiro (state) மாகாணத்தின் ஒரு பகுதியான Banguவில் 43.2 மில்லி மீட்டர் என்ற அளவில் மழையானது பதிவாகியுள்ளது.

மழை வெள்ளம் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் சிக்கி 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர். அங்குள்ள தெருக்களில் மழை வெள்ளம் ஆறு போல ஓடும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பரவலான பொருட்சேதங்களை ஏற்படுத்தியுள்ளதோடு நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதமடைந்துள்ளது.

Barra do Piraí, Nova Iguaçu, Japeri மற்றும் Mendes ஆகிய இடங்களில் வசிக்கும் சுமார் 600 பேர் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதனிடையில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்றும், வரும் நாட்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் தொடரும் என்றும் அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content