அரபிக்கடலில் கடத்தப்பட்ட கப்பல் இந்திய கடற்படை மீட்பு

சோமாலியா அருகே அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட லைபீரியாவைச் சேர்ந்த MV Leila Norfolk வணிகக் கப்பலின் பணியாளர்களை மீட்பதில் இந்திய கடற்படை வெற்றி பெற்றுள்ளது.
லைபீரிய கொடியுடன் கூடிய கப்பல் ஆயுதம் ஏந்திய குழுவினால் கடத்தப்பட்டதாக பிரிட்டிஷ் கடல்சார் ஏஜென்சிக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, இந்திய கடற்படை வீரர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதில் 21 பணியாளர்கள் உள்ளனர் அவர்களில் 15 பேர் இந்தியர்கள்.
குறித்த கப்பலும் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)