இலங்கை

இலங்கை – கண்டியில் இரு மரங்கள் முறிந்து விழுந்ததில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

கண்டி, திலக் ரத்நாயக்க மாவத்தையில் இரண்டு பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், அவ்விடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 08 வாகனங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

குறித்த சம்பவம் இன்று (27.12) காலை பதிவாகியுள்ளது.  அடுத்தடுத்து இருந்த போ மரமும், சப்பு மரமும் இவ்வாறு முறிந்து விழுந்துள்ளன.

கனமழை காரணமாக இந்த மரங்களின் வேர்கள் அழுகிவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால், அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிகள், கார்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட 8 வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்த இருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி தலைமையக பொலிஸார், மாநகர தீயணைப்பு பிரிவினர், இராணுவத்தினர் மற்றும் நகர சபையினர் இணைந்து முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதையடுத்து அந்த வீதியில் போக்குவரத்து பல மணித்தியாலங்கள் தடைப்பட்டது.

(Visited 4 times, 1 visits today)
See also  இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் ஒன்றுக்கூடிய அதிகாரிகள் : சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்!
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content