ஆசியா

சிங்கப்பூரில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை – நூற்றுக் கணக்கானோர் கைது

சிங்கப்பூரில் 146 பெண்கள் மற்றும் 36 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

லிட்டில் இந்தியா உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 20 மற்றும் நவம்பர் 25 திகதிக்கும் இடையில் நடந்த சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.

இந்த சோதனை லிட்டில் இந்தியா, போட் கீ, புகிஸ் மற்றும் சைனாடவுனில் உள்ள மசாஜ் கடைகள், பொது பொழுதுபோக்கு கடைகள் மற்றும் தனியார் இடங்களில் நடந்தது.

மேலும் இதில் 5 பொது பொழுதுபோக்கு கடைகள் உரிமம் தொடர்பான பல்வேறு நிபந்தனைகளை மீறியது கண்டறியப்பட்டது.

லிட்டில் இந்தியாவிலுள்ள ஒரு கடைவீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் 18 முதல் 39 வயதுக்கு உட்பட்ட 14 நபர்கள் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அந்த சோதனையின் போது கடைவீட்டில் ஆணுறைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தீவு முழுவதும் கடந்த நவம்பர் 15 முதல் கடந்த டிசம்பர் 18 வரை பலத்த சோதனை நடந்துள்ளது.

பல சோதனை நடவடிக்கையில் மொத்தம் 885 ஆண்களும் 509 பெண்களும் பல்வேறு குற்றங்களுக்காக விசாரணையில் உள்ளனர்.

(Visited 9 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content