கிரிக்கெட் மட்டையால் கணவனுக்கு நேர்ந்த விபரீதம் : மனைவி கைது
திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் மனைவி கிரிக்கெட் மட்டையால் கணவனின் தலையில் தாக்கியதில் கணவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலையில் பலத்த காயமடைந்த அவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதுடைய சந்தேகநபரை திஸ்ஸமஹாராம பொலிஸாரால் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 11 times, 1 visits today)





