உலகம் செய்தி

சீனாவின் பொருளாதாரத்தில் சரிவு!! உலகின் கவனம் பெற்றுள்ள சீன அமெரிக்க பேச்சுவார்த்தைம

சீனாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் வழக்கத்தை விட வேகமாக தங்கள் பணத்தை சீனாவில் இருந்து வெளியே அனுப்புவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனப் பொருளாதார வளர்ச்சியின் பலவீனம், குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் அமெரிக்காவுடன் நிலவும் புவிசார் அரசியல் மோதல் ஆகியவை இதற்குக் காரணம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன் காரணமாக இந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு குறித்து உலகின் கவனம் குவிந்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போது பல வர்த்தக நிறுவனங்கள் மாற்றுச் சந்தைக்கான திட்டங்களைத் தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த செப்டம்பரில் முடிவடைந்த காலாண்டில், சீனாவில் இருந்து 11.8 பில்லியன் டொலர்கள் அந்நிய முதலீடுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1988ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் இருந்து இவ்வாறானதொரு நிலை பதிவாகியிருப்பது இதுவே முதல்முறை என்பதும் விசேட அம்சமாகும்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!