இலங்கை செய்தி

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

தபால் ஐக்கிய முன்னணியினால் இன்றும் நாளையும் அனைத்து தபால் நிலையங்களிலும் முன்னெடுக்கப்படும் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக தபால் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன.

தபால் திணைக்களத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மூன்று நாட்களுக்கு அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையையும் ரத்து செய்ய தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை