இலங்கை

இலங்கையில் வீடுகளை இழந்தவர்களுக்கு காணிகள் வழங்கிவைப்பு!

கிரேட்டர் ஹம்பாந்தோட்டை’ அபிவிருத்தித் திட்டத்தினால் 97 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன.

இதன்படி, அம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் அமைந்துள்ள 10.11 ஹெக்டேர் அரச காணி, குழுவிற்கு வழங்குவதற்கு மாற்று காணியாக இனங்காணப்பட்டுள்ளது.

குடியிருப்பு பயன்பாட்டிற்காக 126 காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், வீடுகளை இழந்த 97 குடும்பங்களில் 84 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய, சிறிபோபுரவில் அமைந்துள்ள 10.11 ஏக்கர் அரச காணியில் ஒரு பகுதியை வீடுகளை இழந்த மக்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!