பிரித்தானியாவில் சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

பிரித்தானியாவில், 12 மாதங்களுக்கு குறைவான சிறைத்தண்டனை பெற்றவர்கள் இனி சிறை செல்லவேண்டாம் என்னும் வகையில் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
இதற்கு சில தரப்பினர் தங்களது எதிர்ப்பினையும் முன்வைத்துள்ளனர்.
பிரித்தானிய சிறைகள் நிரம்பி வழிகின்றன. சுமார் 88,225 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்காக, மக்களுடைய வரிப்பணம் ஆண்டொன்றிற்கு 47,000 பவுண்டுகள் செலவிடப்படுகிறது.
ஆகவே, சிறைகள் நிரம்பி வழிவதைத் தடுப்பதற்காக, நீதித்துறைச் செயலரான அலெக்ஸ் சால்க் (Alex Chalk) சில புதிய திட்டங்களை முன்வைத்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)