ஆசியா

சிங்கப்பூரில் வேலையிட விபத்து – வெளிநாட்டு ஊழியர் மரணம்

சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் 10ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டுமானத் தளத்தில் கட்டுமான ஊழியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 29 வயது பங்களாதேஷ் ஊழியராகும். கழிவுப்பொருள்களை ஏந்திய தொட்டி ஒன்று மோதியதில் அவர் உயரத்திலிருந்து கீழே விழுந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

செம்பவாங்கில் உள்ள புளோக் 371Bஇல் அந்த விபத்து கழிவுப்பொருள் தொட்டியைத் தூக்குவதில் பாரந்தூக்கி ஓட்டுநருக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தபோது அது வேகமாக அசைந்து ஊழியர் மீது மோதியது.

வலுவான மோதல் என்பதால் ஊழியர்கள் கீழே விழாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளோடு சேர்ந்து அவர் தரையில் விழுந்தார்.

சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் பின்னர் காயங்களால் உயிரிழந்துள்ளார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம்வரை மொத்தம் 14 வேலையிட மரணங்கள் பதிவாகியுள்ளன.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
Skip to content