மத்திய கிழக்கு

ஈரான் மற்றும் சவுதி அரேபிய தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்கும் இடையில் இஸ்ரேல் – பலஸ்தீன முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (11.10) தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது பாலஸ்தீனத்துக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ஒவ்வொரு ஹமாஸ் உறுப்பினரும் அவர் உயிருடன் இருந்தாலும் இறந்தவர் தான் என விவரித்துள்ளார்.

அல்-அக்ஸா தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலில் உத்தியோகபூர்வ போர் நிலை அறிவிக்கப்பட்டதுடன் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!