செய்தி வட அமெரிக்கா

13 அடி நீளமுள்ள இராட்சத முதலையின் வாயில் இருந்த மனித உடல்

புளோரிடா அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமாகும். இதன் தலைநகரம் தல்லாஹஸ்ஸி. பினாலஸ் கவுண்டி மாநிலத்தின் மத்திய மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

அங்குள்ள நீர்நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அதிகாரிகள் விரைந்து அப்பகுதிக்குச் சென்றனர்.

சம்பவ இடத்தின் ரிட்ஜ்கிரெஸ்ட் பகுதியில் 121 வது தெரு மற்றும் 134 வது வடக்குக்கு அருகில் உள்ள நீர்நிலையில் 13 அடி நீளமுள்ள முதலை காணப்பட்டது. மனித உடலின் ஒரு பகுதி அதன் வாயில் இருந்துள்ளது.

இதையடுத்து முதலை சுடப்பட்டது. அதன் வாயிலிருந்து மனித உடல் உறுப்புகளை அதிகாரிகள் பாதுகாப்பாக அகற்றி பரிசோதனை செய்தனர்.

விசாரணையில் உயிரிழந்தவர் 41 வயதான சப்ரினா பெக்காம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சில மணி நேரம் நடந்த இந்த செயலை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளூர்வாசி டெர்ரி வில்லியம்ஸ் கூறுகையில், “இவ்வளவு நீளமான பெரிய முதலை இங்குள்ள ஏரியில் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

(Visited 15 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!