இலங்கை

சோழன் சாதனை படைத்த பாடசாலை மாணவி

பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் 54 கிலோமீற்றர் தூரத்தை 8.30 மணித்தியாலங்களில் நடந்து சென்று சோழன் சாதனை படைத்துள்ளார்.

ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள சென்.மேரிஸ் தேசிய பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் வசந்தகுமார் நிதர்ஷன (15) என்ற மாணவியே இச் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

புதன்கிழமை (20) காலை 6.05 மணிக்கு நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய மைதானத்தில் இருந்து புறப்பட்ட அவர், பிற்பகல் 2.35 மணியளவில் நடைப்பயணத்தை முடித்தார்.

நாவலப்பிட்டி, கினிகத்தேனை, வட்டவளை, ஹட்டன், டிக்கோயா, நோர்வூட் ஆகிய நகரங்கள் ஊடாக பொகவந்தலாவவை சென்றடைந்தபோது பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் வீதிகளில் வரிசையாக நின்று அவரை உற்சாகப்படுத்தினர்.

சோழன் உலக சாதனை புத்தகத்தின் பிரதிநிதி சினகவாணி ராஜா, நிகழ்ச்சியை கண்காணித்து, சோழன் சாதனை புத்தகத்தில் நிதர்ஷனாவின் பெயர் இடம்பெறும் என்றார்.

இதற்கிடையில், அவரது திறமைக்காக புனித மேரிஸ் தேசிய பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்களால் பாராட்டப்பட்டது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!