இலங்கை செய்தி

166,938 பேர் இந்த வருடம் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி

2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரர்களில் 166,938 பேர் இந்த வருடம் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தகுதி பெற்றவர்களில் 49,487 பள்ளி விண்ணப்பதாரர்களும் 17,451 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வருடம் 59 பாடசாலை விண்ணப்பதாரிகளின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், 25 தனியார் விண்ணப்பதாரிகளின் பெறுபேறுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

2022 உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 63,933 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தனர்.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகள் மாத்திரமே மீண்டும் 2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு விரும்பினால், https://onlineexams.gov.lk/ என்ற ஊடாக மீண்டும் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 16 வரை விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெறுபேறுகளின் மீள் சோதனைக்காக விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

See also  சாதனை படைத்த அயர்லாந்து அணி

அத்துடன், பெறுபேறுகள் வெளியாகி 24 மணித்தியாலங்களுக்குள் அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தை அணுகி தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்ய முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content