மும்மைபயில் இருந்து நாடுபடத்தப்பட்ட யாழ்ப்பாணத்து நபர்
![](https://iftamil.com/wp-content/uploads/2023/08/bia-jpg.webp)
விமானப் பயண தடை விதிக்கப்பட்டிருந்த ஒருவரை இந்தியாவில் பதுங்கியிருந்த நிலையில், கட்டுநாயக்க குடிவரவு அதிகாரிகள் இன்று இந்தியாவிற்கு அழைத்து வருவதில் வெற்றி பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாற்பத்தைந்து வயதுடைய இந்த நபர் நேற்று இரவு 11.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் மும்பைக்கு சென்றுள்ளார்.
ஒரு அவுஸ்திரேலிய பெண் பயணி ஒருவர் குடியேற்றப் பகுதியை இந்த நபர் தவிர்ப்பதைக் கண்டு குடியேற்ற அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.
இவரைப் பற்றிய தகவல் கிடைத்ததும், இந்தியாவின் மும்பையில் உள்ள விமான அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, அவர் விமானத்தில் இருந்து இறங்கியதும் கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு கவுன்டர்களுக்கு பயணி வராத போதும் அவரது கடவுச்சீட்டில் போலியான முறையில் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு முத்திரை பதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.