உலகம்

மியான்மாரில் விமானத்தில் பிறந்த குழந்தை – சக பயணிகளின் உதவியுடன் நடந்த பிரசவம்

மியான்மார் நாட்டில் வான்வெளியில் பயணிகள் விமானத்தில் குழந்தை ஒன்று பிறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றள்ளது.

கர்ப்பிணிக்கு திடீரென்று பிரசவவலி ஏற்பட்டதில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

மியான்மர் நாட்டின் தச்சிலிக் நகரிலிருந்து எங்கோனுக்கு உள்ளூர் தனியார் விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தது. அதில் கர்ப்பிணி பெண் ஒருவரும் பயணித்து கொண்டிருந்தார்.

அவருக்கு திடீரென்று பிரசவவலி ஏற்படவே விமான பணி பெண்கள் செய்வதறியாது திகைத்தனர். இருப்பினும் சகபயணிகள் உதவியுடன் அவர்கள் பிரசவம் பார்த்து அழகிய பெண்குழந்தையை ஈன்றெடுத்தனர்.

சுமார் 20 நிமிடம் கலைவரத்துக்கு பிறகு மீண்டும் தச்சிலிக் நகருக்கே அந்த விமானம் திருப்பிவிடப்பட்டது. அங்கு தாயும் சேயும் நல்ல உடல்நலத்துடன் தரையிறங்கினர்.

அங்கு காத்திருந்த மருத்துவ குழுவினர் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!