இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்திற்கு முன்பாக போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் இல்லத்திற்கு முன்பாக இன்று (26.08) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இனவாதத்தை விதைப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தி பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அவரின் வீட்டிற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிசார் தலையிட்டு எம்.பி.யின் வீட்டிற்கு சுமார் 20 மீற்றர் தூரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியதுடன், பாதுகாப்பிற்காக பொலிஸ், கலகத் தடுப்புப் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இலங்கை விமானப்படையினர் அழைக்கப்பட்டிருந்ததாக  தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஒரு மணி நேரம் மறியல் செய்ததை அடுத்து குழுவினர் கலைந்து சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!