ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட அகதிகள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அகதிகள் பலரை அரசாங்கம் மீள் குடியேற்றம் செய்துள்ளது.

நகரசபைக்கு முன்னால் தங்கியிருந்து தங்குமிட கோரிக்கை வைத்திருந்த அகதிகளே மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒகஸ்ட் மாத ஆரம்பத்தில் இருந்து பரிஸ் நகரசபைக் கட்டிடத்தின் (Hôtel de ville) முற்றத்தில் அகதிகள் பலர் தங்கியுள்ளனர்.

அங்கு கின்னியா, ஐவரி கோஸ்ட், மாலி போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 226 அகதிகள் சிறிய கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்ததனர்.

அத்துடன், தங்குமிட கோரிக்கையும் வைத்திருந்தனர். ஆனால் நகரசபை இந்த அகதிகள் தொடர்பான பிரச்சனையை அரசிடம் கொண்டுசென்றிருந்தது.

இந்நிலையில், அவர்கள் அனைவரும் நேற்று புதன்கிழமை காலை அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கான தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content