தொலைப்பேசியில் ஆபாச படங்களை வைத்திருந்த யுவதிக்கு நேர்ந்த கதி!

தொலைப்பேசியில் ஆபாசமான புகைப்படங்களை வைத்திருந்தமை மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டமை தொடர்பில் யுவதி ஒருவருக்கு தண்டப்பணம் விதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த யுவதி தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், மேற்படி அநுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய தண்டனை விதித்தார்.
இதன்படி குறித்த குற்றச்சாட்டுகளுக்கும் தலா 1500 ரூபா அரசாங்கக் கட்டணமாக வழங்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்த ஆபாச புகைப்படங்களை மீளமுடியாதவாறு நீக்கவும் சிம் கார்ட் மற்றும் மெமரிகளில் உள்ளவற்றை அழிக்கவும் அனுராதபுரம் பொலிஸ் தகவல் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஐ.சி.பி. இலங்கசிங்கவுக்கும் நீதிவான் உத்தரவிட்டார்.
(Visited 12 times, 1 visits today)