இலங்கை

328 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்!

மேலும் சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

இதன்படி  இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் இன்று (07.20) மேலும் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி மேலும் 328 பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அவர் அறிவித்துள்ளார். இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

அண்மையில் 300 பொருட்கள் மீதான இறக்குமதி நீக்கப்பட் நிலையில், தற்போது மேலும் சில பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்பட வாய்ப்பில்லை. இந்த விடயம் தொடர்பில் கடந்த மாதம் பேசிய சியம்பலாபிட்டிய, தற்போதுள்ள பொருளாதார நிலைமைகளின் கீழ் வாகன இறக்குமதியை இன்னும் அனுமதிக்க முடியாது என தெரிவித்திருந்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!