ஆசியா செய்தி

மாணவருக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டிய சிங்கப்பூர் ஆசிரியருக்கு சிறைதண்டனை

தம்மிடம் பயின்ற மாணவர் ஒருவருக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டிய குற்றத்திற்காக சிங்கப்பூர் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு 54 நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. அப்போது அந்த மாணவரின் வயது 17.

ஆசிரியர் தம்மிடம் ஆபாசக் காணொளிகளைக் காட்டியது குறித்து மாணவர் தன் தாயிடம் கூறினார். அதைத்தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்திடம் மாணவரின் தாய் புகார் கொடுத்தார்.

அதன் பின்னர் அந்த 49 வயது ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆசிரியரும் அவரது பணியில் இருந்து விலகினார்.

மாணவரின் மனவுளைச்சலைக் குறைக்க ஆபாசக் காணொளிகளைக் காட்டியதாக ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் மீதான குற்றம் மார்ச் மாதம் நிரூபிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவருக்கு நேற்று தண்டனை விதிக்கப்பட்டது.

(Visited 12 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி