“Project Freedom” – அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!
அமெரிக்கா தனது கப்பல்களைப் பாதுகாக்க ஹார்முஸ் நீரிணைப் பகுதிக்குள் நுழைந்தால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை பாதை முழுவதும் ஈரானிய படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அங்கு நுழையும் வெளிநாட்டுப் படைகளைத் தாங்கள் எதிர்க்கப் போவதாகவும் மேஜர் ஜெனரல் அலி அப்துல்லாஹி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா “Project Freedom” என்ற திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் போர் விமானங்களை அந்தப் பகுதியில் நிறுத்தத் தயாராகிவரும் நிலையிலேயே ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.





