உலகம் செய்தி

அமைதி பேச்சை மீள ஆரம்பிக்கவும்: ஈரான், அமெரிக்காவுக்கு திருத்தந்தை அழைப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் முன்னெடுக்குமாறு திருத்தந்தை லியோ, அறைகூவல் விடுத்துள்ளார்.

போரினால் அப்பாவி மக்கள் எதிர்நோக்கும் சொல்லொணாத் துயரங்களைக் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, மோதல்களைத் தவிர்த்து சர்வதேச சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அமெரிக்க ஜனாதிபதியுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், வெறுப்புணர்வை விடுத்து அமைதி கலாச்சாரத்தை வளர்க்குமாறு அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக்கொண்டார்.

லெபனான் பயணத்தின் போது தான் சந்தித்த சிறுவனொருவர் போரில் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்த திருத்தந்தை, வன்முறைக்கு எதிராகத் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!