33,000 லீற்றர் எரிபொருளுடன் விபத்துக்குள்ளான பௌசர்!
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் புவகஹவெல பகுதியில் எரிபொருள் தாங்கி பௌசர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த எரிபொருள் தாங்கி பௌசரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பௌசரில் ஏற்பட்ட இயந்திர பிரச்சினைக் காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான பௌசரில் சுமார் 33,000 லீற்றர் எரிபொருள் இருந்ததாகக் கூறப்படுகிறது. பௌசர் வீதியில் கவிழ்ந்ததையடுத்து, அதிலிருந்த பெருமளவிலான எரிபொருள் வீதியெங்கும் பரவி ஓடியது.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த பிரதேச வாசிகள், கொள்கலன்கள் மற்றும் வாளிகளுடன் வந்து வீதியில் வழிந்தோடிய எரிபொருளைச் சேகரிப்பதில் ஈடுபட்டடுள்ளனர்.





