ஈரான்மீதான போர் நிறுத்தப்பட வேண்டும்: இலங்கையில் போராட்டம்!
ஈரான்மீதான ஆக்கிரமிப்பு போரை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று (07) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சோசலிச சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டில் கண்டி மாவட்டம், பேராதனை, கலஹா சந்தியிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சோசலிச அனைத்துலகவாத போர் எதிர்ப்பு இயக்கம் கட்டியெழுப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
பேராதனை, ஹிந்தகலவில் அமைந்துள்ள ஓரியண்ட் கல்வி நிறுவனத்தில், இது தொடர்பில் இன்று மாலை பகிரங்க கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






