இஸ்ரேல் தாக்குதலில் 15 Hezbollah அமைப்பினர் பலி!
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் Hezbollah அமைப்பைச் சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவ திட்டமிட்டிருந்த குழுவினரை அடையாளம் கண்டு அழித்ததாக இஸ்ரேல்ராணுவம் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கிருந்த துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை Hezbollah அமைப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இரு தரப்பிற்கும் இடையே நிலவும் இந்த மோதல் சூழலை இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
46-வது பிரிவு மேற்கொண்ட இந்தத் துல்லியமான நடவடிக்கையால் பெரும் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இஸ்ரேல் கருதுகிறது.





