இலங்கை

ஈரானிய கப்பல் பணியாளர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் – இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா!

ஈரானிய கப்பல் பணியாளர்களை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக  ரொய்டர்ஸ்  செய்தி வெளியிட்டுள்ளது.

ஐஆர்ஐஎஸ் தேனா ( IRIS Dena) போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கையை கேட்டுக் கொண்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாலுமிகளை பிரச்சார நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் குறைக்குமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த புதன்கிழமை காலியில் இருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் ஐஆர்ஐஎஸ் தேனா போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்தது.

இந்த சம்பவத்தில் ஏராளமான மாலுமிகள் உயிரிழந்தனர். அதே நேரத்தில் இலங்கை கடற்படையின் உதவியுடன் 32 உயிர் பேர் கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.

பின்னர் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!