உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரிக்காக மொட்டு கட்சி காத்திருப்பு!
“எமது ஆட்சியின்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சர்வதேசம்வரை சென்ற பேராயர் தற்போது மௌனம் காப்பது ஏன்?
பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க கோரி அவர் வீதியில் இறங்காமல் இருப்பது ஏன்?”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி Tissa Kuttiyarachchi கேள்வி எழுப்பினார்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் நடத்தப்பட்டது என்பதுபோலவே காண்பிப்பதற்கு கடந்த காலங்களில் தகவல் பரப்பட்டது.
போரை முடித்த தலைவர் உள்ள கட்சியில் உள்ள எமக்கு குண்டு வெடிக்க வைக்கப்பட வேண்டிய தேவைப்பாடு கிடையாது.
தமது ஆட்சியின்போது பிரதான சூத்திரதாரியை கைது செய்வோம் என தேசிய மக்கள் சக்தியினர் கூறினார்கள். அதனை அவர்கள் செய்ய வேண்டும்.
எமது ஆட்சியின்போது பேராயர் வீதியில் இறங்கினார். சர்வதேசம்வரை சென்றார். தற்போது அவர் வீதிக்கு இறங்க வேண்டும்.
பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.” – எனவும் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.





