தைவானில் நிலநடுக்கம் : கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு!
தைவானின் வடகிழக்கு மாவட்டமான யிலான் கடற்கரையில் இன்று 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் கட்டிடங்கள் சிறிது நேரம் குலுங்கியதாகவும், இருப்பினும் உயிர், உடமை சேதங்கள் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலநடுக்கம் 66.8 கிமீ (41.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி மாவட்ட அரசாங்க இடத்திலிருந்து 16.9 கிமீ (10.5 மைல்) தொலைவில் இருந்தாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





