உடன் அமலுக்கு வரும் வகையில் 10 சதவீதம் வரி விதிப்பு – நீதிமன்றத்தை புறக்கணித்த ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கைக்கு எதிராக அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், உலக நாடுகள் மீது உடன் அமுலுக்கு வரும் வகையில் மீளவும் 10 சதவீத வரியை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அதாவது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை புறக்கணித்து அவர் இந்த வரி விதிப்பை அறிவித்துள்ளார்.
அவசரகால அதிகாரச் சட்டத்தின் கீழ் பல நாடுகள் மீது குறிப்பாக தன்னுடைய கட்டளைக்கு அடிப்பணியாத நாடுகள் மீது ட்ரம்ப் வரி விதிப்பை அமுல்படுத்திவருகிறார்.
இந்த நடவடிக்கையானது கூட்டாட்சி சட்டத்தை மீறுவதாக உச்சநீதிமன்றம் கண்டறிந்ததை தொடர்ந்து அனைத்து வரிகளையும் இரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் புதிய வரியை அறிவித்துள்ளார்.





