சூடானில் உணவு கொண்டு சென்ற லொறிகளை குறிவைத்து தாக்குதல் – மூவர் பலி!
சூடானின் தெற்கு கோர்டோஃபான் மாநிலத்தில் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) நடத்திய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது மூன்று உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுக்லி (Kadugli) மற்றும் டில்லிங் (Dilling ) நகரங்களுக்குச் செல்லும் வழியில் இந்த தாக்குதல் நேற்று நடத்தப்பட்டுள்ளது.
உணவு மற்றும் மனிதாபிமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகளை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மனிதாபிமானப் படைகளை வேண்டுமென்றே குறிவைத்ததை அதிகாரிகள் கண்டித்துள்ளனர்.
இது சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் மனிதாபிமானப் பணியாளர்கள் மீதான தாக்குதல்களைத் தடைசெய்யும் அனைத்து விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





